×

நெடுஞ்சாலைத்துறையில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நெடுஞ்சாலைத்துறையில், பணியின்போது, இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள். நெடுஞ்சாலைத்துறையில், பணியின்போது மறைந்த ஈப்பு ஒட்டுநர், சாலைப் பணியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், 10 கோட்டங்களில் பணி நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்ட, 2 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 8 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை.

இன்று(14.12.2023) சென்னை, தலைமைச் செயலகத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்கள். இந்நிகழ்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் சாந்தி மற்றும் நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஆர்.சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post நெடுஞ்சாலைத்துறையில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Tags : Minister ,A. V. Velu ,Chennai ,Works ,Minor Ports ,AV Velu ,Chennai Chief Secretariat ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...