×

புயல் நிவாரணம் – ஜாக்டோ ஜியோ ஒருநாள் ஊதியம்

சென்னை: வெள்ள நிவாரணத்துக்காக ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் ஒரு நாள் ஊதியத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்பரசு அறிவித்துள்ளார். ஜாக்டோ ஜியோ அமைப்பில் 14 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 14 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதால் பல கோடி கிடைக்கும் எனவும் கூறியுள்ளனர்.

The post புயல் நிவாரணம் – ஜாக்டோ ஜியோ ஒருநாள் ஊதியம் appeared first on Dinakaran.

Tags : Jacto Geo ,Chennai ,Jacto Jio Association ,Tamil Nadu government ,Jacto Jio ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...