×

சென்னையில் வடகிழக்கு பருவமழை 44% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழை 44 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் இன்று வரை இயல்பாக 749.9 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 1079.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 5 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. அக்டோபர் 1 முதல் இன்று வரை இயல்பாக 407.3 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 386.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

 

The post சென்னையில் வடகிழக்கு பருவமழை 44% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Meteorological Department ,North East ,northeast ,Dinakaran ,
× RELATED ஊட்டியில் இன்று இதுவரை இல்லாத அளவாக...