×

சாத்தான்குளம் கொலை வழக்கு மாஜிஸ்திரேட்டிடம் குறுக்கு விசாரணை

 

மதுரை: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கு விசாரணை மதுரை முதலாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி தமிழரசி முன் நேற்று மீண்டும் வந்தது. இதற்காக சிறையில் உள்ள 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். சம்பவம் நடந்த போது கோவில்பட்டியில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி, சம்பவம் குறித்து விசாரித்த மாஜிஸ்திரேட் பாரதிதாசன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் தரப்பில் குறுக்கு விசாரணை நடந்தது. மற்றவர்கள் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்துவதற்காக விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post சாத்தான்குளம் கொலை வழக்கு மாஜிஸ்திரேட்டிடம் குறுக்கு விசாரணை appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Madurai ,Salesman Jayaraj ,Satankulam, Thoothukudi district ,Bennix ,Dinakaran ,
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்