×

பாஜவுக்கு ஓட்டு போடாததால் தமிழகத்துக்கு குறைவான நிதி: மணிசங்கர் அய்யர்

கொள்ளிடம்: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மணிசங்கர்அய்யர் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடவாசல் கிராமத்தில் நேற்று அளித்த பேட்டி: 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எப்படி இருந்தாலும் நாம் கடுமையாக போராட வேண்டும். நாட்டை காப்பாற்ற வேண்டியது தான் அவசியம். சென்னை வெள்ள நிவாரணத்திற்கு ஒன்றிய அரசு கொடுத்துள்ள நிதி மிகவும் குறைவாக உள்ளது. அதற்கு காரணம் தமிழ்நாடு, பாஜவிற்கு ஓட்டு போடவில்லை. அந்த ஒரே காரணத்தினால் தமிழகத்தில் குறைந்த நிதி ஒதுக்குகின்றனர். இப்படியா அரசியல் நடத்துவது. இப்படியா நமது நாட்டின் ஒற்றுமையை காப்பாற்றுவது. இதனை புரிந்து கொள்ளும் அளவுக்கு பாஜவுக்கு புத்தி இல்லை. அமலாக்கத்துறை நிறைய இடங்களில் அட்டகாசம் செய்து வருகிறது. ஜனநாயகத்துக்கு அது பெரிய ஆபத்து. நாட்டின் ஒற்றுமையையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பது அவசியம். இந்தியா கூட்டணிக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

The post பாஜவுக்கு ஓட்டு போடாததால் தமிழகத்துக்கு குறைவான நிதி: மணிசங்கர் அய்யர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Baja ,Manisankar ,Manishankarayyar ,Congress ,Union Minister ,Kadawasal ,Mayladudura district ,Bajaj ,Manisankar Aiyar ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...