சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரி மண்டபத்தில் தேசிய கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். முன்னதாக, சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை அனுமதிக்காமல் காலம் கடத்தி வருவதை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிதம்பரம் கஞ்சிதொட்டி அருகே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 41 பேரை போலீசார் கைது செய்தனர்.
The post ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி appeared first on Dinakaran.