×

தமிழ்நாட்டில் சில இடங்களில் 16, 17ம் தேதிகளில் கனமழை பெய்யும்

சென்னை: தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதியில் உருவாகியுள்ள காற்று சுழற்சி அரபிக் கடல் பகுதிக்கு நகர்ந்து வருகிறது. மேலும், வடக்கு பகுதியில் இருந்து வரும் குளிர் காற்றை அது இழுத்து கன்னியாகுமரி வழியாக கிழக்கு நோக்கி கடத்துகிறது. அதனால், தமிழ்நாட்டில் மழை பெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இலங்கைக்கு தெற்கே உருவான காற்று சுழற்சி கிழக்கு காற்றலையை தமிழ்நாடு வழியாக கடத்தும். அதன் காரணமாக கோடியக்கரை, ராமேஸ்வரம், டெல்டா மாட்டங்களில் நாளை முதல் மழை பெய்யும். 15ம் தேதி வட மாவட்டத்திலும், தென் மாவட்டத்திலும், அனைத்து உள் மாவட்டத்திலும் காலை முதல் மழை பெய்யத் தொடங்கும். தமிழக கடலோர எல்லையோரம் வரை மழை பெய்யும். 16ம் தேதி மதியம் ஆங்காங்கே மழை பெய்யும். தென் மாவட்டங்களில் 17ம் தேதி மழை பெய்யும்.

அடுத்து, குமரிக் கடல் பகுதியில் உருவாகும் காற்று சுழற்சி காரணமாக 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை மழை நீடிக்கும். அடுத்தபடியாக சுமத்ரா தீவுக்கு மேற்கு பகுதியில் இந்த மாத இறுதியில் ஒரு காற்றழுத்தம் உருவாகி, படிப்படியாக தமிழகம் நெருங்கி வந்து 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை அதிக அளவில் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் சில இடங்களில் 16, 17ம் தேதிகளில் கனமழை பெய்யும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,North East ,Maldives ,Lakshadweep ,
× RELATED வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு; சென்னை...