×

தூத்துக்குடியில் வீட்டிலிருந்த 45 பவுன் நகைகள் மாயம்

தூத்துக்குடி, டிச. 14: தூத்துக்குடி கேவிகே நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி(68), தூத்துக்குடி சிவன் கோயில் அருகே பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி, கடந்த செப்டம்பர் மாதம் வீட்டில் நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவர் தனது வீட்டில் பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்த 45 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக பெரியசாமி அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபாஜென்சி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

The post தூத்துக்குடியில் வீட்டிலிருந்த 45 பவுன் நகைகள் மாயம் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Periyasamy ,KVK ,Shiva Temple ,
× RELATED தூத்துக்குடியில் வீட்டிற்கு வெளியே புதைத்த தாயின் சடலம் தோண்டி எடுப்பு..!!