×

விகேபுரம், தென்காசியில் 3 மலைப்பாம்புகள் பிடிபட்டன

விகேபுரம், டிச.14: விகேபுரம் அருகே சிவந்திரபுரம் ஊராட்சி புலவன்பட்டியை சேர்ந்தவர் பால்துரை. இவரது விளைநிலத்தில் 2 மலைப்பாம்புகள் இருப்பதை கண்டு பாபநாசம் வனச்சரகர் சத்தியவேலுக்கு தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் வந்து 12 அடி, 10 அடி நீள மலைப்பாம்புகளைபிடித்து கோரையார் பீட் வனப்பகுதியில் விடப்பட்டது. தென்காசி: தென்காசியை அடுத்த மின்நகர் 11வது தெரு விரிவாக்கம் பகுதியில் வீடு கட்டுவதற்காக நேற்று மாரியப்பன் என்பவர் இடத்தை சுத்தம் செய்து உள்ளார். அப்போது அங்கு மலைப்பாம்பு ஒன்று கிடந்தது. இதுகுறித்து தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தென்காசி தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் பிரதீப் குமார் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று சுமார் 6 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறை வசம் ஒப்படைத்தனர். பின்னர் மலைப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

The post விகேபுரம், தென்காசியில் 3 மலைப்பாம்புகள் பிடிபட்டன appeared first on Dinakaran.

Tags : Vikepuram, Tenkasy ,Vikepuram ,Baldurai ,Sivandrapuram Uratchi Pulavanpati ,Tenkasy ,
× RELATED மின் சிக்கனம், பாதுகாப்பு துண்டுபிரசுரங்கள் வழங்கல்