×

சங்கரன்கோவில் பள்ளியில் இலக்கிய மன்ற விழா

சங்கரன்கோவில்,டிச.14: சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாவாணர் மாணவர் இலக்கிய மன்ற விழா நடந்தது. இதில் முதுகலை ஆசிரியர் கணேசன் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் மகாலட்சுமி, சாந்தி முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் துரைச்சி வரவேற்றார். மாணவர் ஆனந்த குமார் தொகுத்து வழங்கினார். மாணவர் அஜய் மெல்லிசை பாடல் பாடினார். மாணவர் பரத்குமார் உரையாற்றினார். ‘ஊடகங்களால் நன்மையா? தீமையா?’ என்கிற தலைப்பில் தமிழ் ஆசிரியர் சங்கர்ராமை நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் நடத்தினர். பின்னர் ‘எது அறம்?’ என்கிற தலைப்பில் மாணவர்களின் வீதி நாடகம் நடந்தது. ஆசிரியர் செல்வம் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் சங்கர் ராம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் தெய்வபிரியா செய்தார்.

The post சங்கரன்கோவில் பள்ளியில் இலக்கிய மன்ற விழா appeared first on Dinakaran.

Tags : Literary Forum Festival ,Sankarankovil School ,Shankarankoil ,Bawanar Students Literary Forum ,Gomati Ambal Government Boys Higher Secondary School ,Sankarenkoil ,Sankarankovil ,School ,Dinakaran ,
× RELATED 50 இயந்திரங்கள் மூலம் சம்பா அறுவடை பணி...