×

ஆவின் பால் கொள்முதல் விலையேற்றத்திற்கான அறிவிப்பை பாஜக வரவேற்கிறது: அண்ணாமலை

சென்னை: ஆவின் பால் கொள்முதல் விலையேற்றத்திற்கான அறிவிப்பை தமிழக பாஜக வரவேற்பதாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பசும் பாலுக்கான விலை லிட்டருக்கு 35 ரூபாயிலிருந்து 38 ரூபாயாகவும், எருமைப்பாலுக்கான விலை 44 ரூபாயிலிருந்து, 47 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை கடினமாக உழைக்கும் தமிழக விவசாயிகளின் சார்பாக நாங்கள் முன்வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலை ஏற்றத்திற்கான அறிவிப்பை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  இந்த பால் கொள்முதல் விலையேற்றத்திற்கான அறிவிப்பை பாஜக வரவேற்கிறது.

தற்போதுள்ள பால் கொள்முதல் அளவு முந்தைய ஆட்சிக் காலத்தை ஒப்பிடும் பொழுது குறைவாக உள்ளது என்பதையும் பாஜக தொடர்ச்சியாக கோடிட்டுக் காட்டி வருகிறது. முன்பைப் போல் சராசரியாக ஒரு நாளில் குறைந்தபட்சம் 36 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்ய வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

மேலும், கொழுப்புச்சத்து குறைந்த பாலுக்கு புதிய வண்ண பாக்கெட்டில் பழைய விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்ய முற்படுவது போன்ற நடவடிக்கைகளை இந்த அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாஜக சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

 

The post ஆவின் பால் கொள்முதல் விலையேற்றத்திற்கான அறிவிப்பை பாஜக வரவேற்கிறது: அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : BJP ,Avin ,Annamalai ,Chennai ,Tamil Nadu ,Akkatsi ,Awin ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...