×

பெண் எம்பி பதவி பறிப்பு; நாடாளுமன்றத்தை நடத்துவது மோடியா, அதானியா?: கே.எஸ்.அழகிரி கேள்வி

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில், மறைந்த முன்னாள் எம்பி குடந்தை என்.ராமலிங்கம் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிலையை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை அறிவியல் பூர்வமாக நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

ஒரே இடத்தில் 17 மணி நேரம் மழை பெய்தால் இந்தியாவில் எந்த நகரம் தான் தாங்கும். தற்போது சிறப்பான முறையில் வெள்ளம் கையாளப்பட்டுள்ளது. மம்தா கட்சி எம்பியின் பதவி செல்லாது என பதவி நீக்கம் செய்துள்ளனர். இதனை கடுமையாக கண்டிக்கிறேன். நாடாளுமன்றத்தை மோடி நடத்துகிறாரா?, அதானி நடத்துகிறாரா? உரிய பதில் தராமல் எம்பியை வெளியேற்றியது கண்டிக்கத்தக்கது.

The post பெண் எம்பி பதவி பறிப்பு; நாடாளுமன்றத்தை நடத்துவது மோடியா, அதானியா?: கே.எஸ்.அழகிரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Modi ,Adhaani ,KS Alagiri ,Tha.Pazhur ,Cholamadevi ,Ariyalur district ,Kudanta N. Ramalingam ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...