×

கடலில் எண்ணெய் கலந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிபிசிஎல் நிறுவனம் விளக்கம்

சென்னை : கடலில் எண்ணெய் கலந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிபிசிஎல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிவுறுத்தல்படி எண்ணெய்யை அகற்ற உரிய கருவிகளை பயன்படுத்துகிறோம்: கடலில் எண்ணெய் பரவுவதை தடுக்க மிதவைகள் பயன்படுத்தப்படுகிறது. 60 படகுகளில் உறிஞ்சும் அட்டைகள் மூலம் கடலில் பரவியுள்ள எண்ணெய் அகற்றப்பட்டு வருகிறது: சிபிசிஎல் எண்ணெய் குழாய்களில் கசிவு ஏற்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை: முன் எப்போதும் இல்லாத வகையில் ஆலையில் வெள்ளம் சூழ்ந்ததால் எண்ணெய் வெளியேறியுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கடலில் எண்ணெய் கலந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிபிசிஎல் நிறுவனம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : CPCL ,Chennai ,Dinakaran ,
× RELATED நாகையில் சி.பி.சி.எல். நிறுவனத்தின்...