×

மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது

 

திருப்பூர், டிச.13:திருப்பூர் ஏபிடி ரோடு பகுதியை சேர்ந்தவர் புஸ்பவதி (80). தனிமையில் வசித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 26ம் தேதி புஸ்பவதி வீட்டில் புகுந்த வாலிபர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை கழட்டி சென்றார்.

இது குறித்து மத்திய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைபற்றி விசாரணை நடத்தினர். இதில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த அலகுவேல் (40) என்பவரை பிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில் அவர் புஸ்பவதியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து மத்திய போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

The post மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Puspavathy ,APT Road ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...