×

கொலை வழக்கில் ஆஜராகாத எஸ்ஐக்கு பிடிவாரன்ட்

 

சிவகங்கை, டிச. 13: கொலை வழக்கில் ஆஜராகாத எஸ்ஐக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மானாமதுரை அருகே கல்லுப்பட்டியை சேர்ந்தவர் கதிரேசன் இவருக்கும் இவரது எதிர்வீட்டைச் சேர்ந்த பாண்டி என்பவருக்கும் மாடுகள் கட்டுவதில் ஏற்பட்ட பிரச்சினையில் கடந்த 2016ம் ஆண்டு ஏப்.16 அன்று பாண்டியன் கதிரேசனை கொலை செய்துள்ளார். இது தொடர்பாக மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலை நடத்த காலகட்டத்தில் சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐயாக இருந்தவர் முத்துகிருஷ்ணன்.

இவர் தற்போது கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிகிறார். இந்த கொலை வழக்கு சிவகங்கை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த நான்கு மாதமாக நீதிமன்ற விசாரணைக்கு எஸ்ஐ முத்துகிருஷ்ணன் ஆஜராகவில்லை. இதையடுத்து எஸ்ஐ முத்துகிருஷ்ணனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து டிச.21 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டார்.

 

The post கொலை வழக்கில் ஆஜராகாத எஸ்ஐக்கு பிடிவாரன்ட் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,SI ,Kallupatti ,Manamadurai ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி...