×

பள்ளி மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

 

பரமக்குடி, டிச. 13 சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா வாணி தேவர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகளும் திருப்பதி(16) என்ற மகனும் உள்ளார். திருப்பதி பரமக்குடி எமனேஸ்வரத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்பதி டூவீலரில் பழுதுபார்க்கும் கடைக்கு சென்றுள்ளார்.

அங்கு திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் மாணவர் திருப்பதியை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவர் திருப்பதியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பஞ்சவர்ணம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் எமனேஸ்வரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

The post பள்ளி மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Jayaraman ,Vani Devarpuram ,Ilaiyankudi ,Sivagangai district ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்