×

ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் 10 லட்சம் நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைப்பு

 

ஒட்டன்சத்திரம், டிச. 13: ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனையின் பேரில் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் திருமலைசாமி, நகர் மன்ற துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, ஆணையாளர் கணேஷ், வட்டாட்சியர் முத்துச்சாமி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பாண்டியராஜன், பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன், இளநிலை உதவியாளர் ஈஸ்வரன், பணித்தள பொறுப்பாளர் ஆஷிக், கிராம உதவியாளர் விஜயபாஸ்கர் மற்றும் நகராட்சி பணியாளர்கள், வருவாய் துறையினர் இருந்தனர்.

The post ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் 10 லட்சம் நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ottenchatram Municipality ,Othanchatram ,Minister ,Food ,Ottanchatram ,A. Chakrapani ,Ottanchatram municipality ,Dinakaran ,
× RELATED வாழை விவசாயிகளுக்கு பயிற்சி