×

பாலக்காடு அருகே 4 வயது சிறுவன் படுகொலை: உறவுக்கார பெண் வெறிச்செயல்

 

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கொழிஞ்சாம்பாறை வண்ணாமடை பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். இவரது மனைவி ஆதிரா. இந்த தம்பதிக்கு 4 வயதில் ரித்விக் என்ற ஒரு மகன் உண்டு. மதுசூதனனின் அண்ணன் மனைவி தீப்திதாஸ் (29). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்தநிலையில் மதுசூதனனின் தாய் பத்மாவதி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் தங்களது மகன் ரித்விக்கை தீப்தி தாசிடம் விட்டுவிட்டு மதுசூதனனும், ஆதிராவும் மருத்துவமனைக்கு சென்று இருந்தனர். இரவு சுமார் 10 மணியளவில் 2 பேரும் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது மகன் ரித்விக் இறந்த நிலையில் கிடந்தான். அதேவேளையில் தீப்திதாஸ் கை, கழுத்தில் ரத்தக் காயங்களுடன் தரையில் கிடந்தார். உடனே மதுசூதனன் கொழிஞ்சாம்பாறை போலீசுக்குத் தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ரித்விக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயங்களுடன் கிடந்த தீப்திதாஸ் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் தீப்தி தாஸ், ரித்விக்கை கழுத்தை நெரித்துக் கொலை செய்த பிறகு இரும்பு ஆயுதத்தால் தன்னுடைய கை நரம்பு மற்றும் கழுத்தில் குத்தியது தெரியவந்தது.

The post பாலக்காடு அருகே 4 வயது சிறுவன் படுகொலை: உறவுக்கார பெண் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Thiruvananthapuram ,Kojinchamparai Vannamadai ,Kerala ,Adira ,
× RELATED மரத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி