×

மழைநீர் தேக்கம் போரூர் அரசு பள்ளிக்கு 2வது நாளாக விடுமுறை

பூந்தமல்லி: மிக்ஜாம் புயல் காரணமாக போரூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால், நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தண்ணீர் வடியாததால் இரண்டாவது நாளாக நேற்றும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக அதிக அளவு தண்ணீர் இருந்ததால் மாணவிகள் பள்ளிக்கு வர முடியாத சூழல் நிலவி வந்தது.

இந்நிலையில் இன்று அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளதால் தண்ணீரையும் சேற்றையும் பொருட்படுத்தாமல் நேற்று மாணவிகள் பள்ளிக்கு வந்து தங்களது பாட புத்தகங்களை எடுத்து சென்றனர். மேலும், தேங்கி நிற்கும் தண்ணீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் தண்ணீரை முழுமையாக அகற்றி ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்து, மாணவிகளுக்கு நோய் தொற்று எதுவும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

The post மழைநீர் தேக்கம் போரூர் அரசு பள்ளிக்கு 2வது நாளாக விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Borur Government School ,Poonthamalli ,Government Women's Secondary School ,Borur ,Mikjam ,Dinakaran ,
× RELATED போனில் மனைவியுடன் தகராறு: கணவன் தூக்கிட்டு தற்கொலை