×

தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு போட்டியில் திருவள்ளூர் மாணவர்கள் வெற்றி

திருவள்ளூர்: பள்ளி மாணவர்களின் தமிழ்மொழித்திறனை மேம்படுத்த நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு போட்டி தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் திருவள்ளூரில் உள்ள பாரதிதாசன் நிறைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் ஹரிஷ்குமார் 100க்கு 94 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்று சாதனை படைத்தார். இதேபோல் மற்றொரு 11ம் வகுப்பு மாணவனான கோகுலகிருஷ்ணன் 93 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்று சாதனை படைத்தார். இதனையடுத்து அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவர்கள் ஹரீஷ்குமார், கோகுலகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் பள்ளி தாளாளர் உமாசங்கர், தலைமை ஆசிரியர்கள் மேரி, குமரீஸ்வரி, தமிழ் துறை தலைவர் இந்திரா ஆகியோர் பாராட்டி நினைவுப் பரிசாக புத்தகங்கள் வழங்கினர்.

The post தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு போட்டியில் திருவள்ளூர் மாணவர்கள் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED மீஞ்சூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது