×

கட்டுமான பணியின்போது 3வது மாடியிலிருந்து விழுந்த கொத்தனார் பலி

தாம்பரம்: தாம்பரம் அருகே கட்டுமான பணியின்போது 3வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த கொத்தனார் பரிதாபமாக பலியானார். கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிச்சமுத்து (50). கொத்தனார். இவர், தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில், கொத்தனார் பிச்சமுத்து, நேற்று முன்தினம் வழக்கம்போல் கட்டிடத்தின் 3வது மாடியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பிச்சமுத்து கால் தவறி 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். சத்தம்கேட்டு ஓடிவந்த சக பணியாளர்கள், பலத்த காயமடைந்த பிச்சமுத்துவை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பிச்சமுத்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த பீர்க்கன்காரணை போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கட்டுமான பணியின்போது 3வது மாடியிலிருந்து விழுந்த கொத்தனார் பலி appeared first on Dinakaran.

Tags : Mason ,Tambaram ,Cuddalore ,Dinakaran ,
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை