×

அமைச்சர் பொன்முடி வழக்கில் தனக்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த களங்கப்படுத்தும் கருத்துகளை நீக்க வேண்டும்: வேலூர் மாவட்ட நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி

வேலூர்: அமைச்சர் பொன்முடி வழக்கில் தனக்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த களங்கப்படுத்தும் கருத்துகளை நீக்க வேண்டும் என வேலூர் மாவட்ட நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு பதிலளித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை விடுவித்தது வேலூர் மாவட்ட நீதிமன்றம். கீழமை நீதிமன்றம் விடுவித்த உத்தரவுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். யாருக்கும் சாதகமாவோ அல்லது அச்சத்தின் அடிப்படையிலோ தீர்ப்பு வழங்கவில்லை என ஓய்வுபெற்ற நீதிபதி தெரிவித்துள்ளார். வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பளிக்கப்பட்டது எனவும் ஓய்வுபெற்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

The post அமைச்சர் பொன்முடி வழக்கில் தனக்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த களங்கப்படுத்தும் கருத்துகளை நீக்க வேண்டும்: வேலூர் மாவட்ட நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி appeared first on Dinakaran.

Tags : Vellore District Court ,Vellore ,Minister ,Bonmudi ,Ponmudi ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...