×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிபிஐ விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிபிஐ விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அடையாளப்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அல்லது கைவிடப்பட்டதா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சிபிஐ முறையாக விசாரணை நடத்தியது; குற்றப்பத்திரிகை நிராகரிக்கப்பட்டதால் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது. சிபிஐ விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 19ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிபிஐ விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : CBI ,Thoothukudi firing ,Chennai ,Thoothukudi shooting incident ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...