டெல்லி: ஜம்மு காஷ்மீரில் கூட்டாட்சி தத்துவம் மற்றும் ஜனநாயக மதிப்பீடுகள் என்ன ஆனது? என மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பிரிவு 370 தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு அளித்த உறுதியை சுட்டிக்காட்டி ஆ.ராசா கேள்வி எழுப்பினார். சமூகத்தின் விருப்பங்களை முறையாக அணுக வேண்டும். சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட போது ஜம்மு காஷ்மீர் மக்களின் கருத்தை கேட்டிருக்க வேண்டும் என ஆ.ராசா தெரிவித்திருக்கிறார்.
The post ஜம்மு காஷ்மீரில் கூட்டாட்சி தத்துவம் மற்றும் ஜனநாயக மதிப்பீடுகள் என்ன ஆனது?: மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி appeared first on Dinakaran.