×

ராணிப்பேட்டையில் 2வது திருமணம் செய்த பெயிண்டர் கைது

ராணிப்பேட்ைட: ராணிப்பேட்டை கெல்லீஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (38), பெயிண்டர். இவரது மனைவி சந்தானலட்சுமி (28). இவர்களுக்கு 11 வயதில் மகள், 8 வயதில் மகன் உள்ளனர். சதீஷ்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவி, குழந்தைகளிடம் தகராறு செய்வாராம்.

இந்நிலையில் சதீஷ்குமார் சில ஆண்டுகளுக்கு முன் திடீரென மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதனால் சந்தானலட்சுமி, தனது தாய் வீடான வாலாஜா அடுத்த வன்னிவேட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன் மீண்டும் ஊருக்கு வந்த சதீஷ்குமார், மனைவி, மாமியாரிடம், ‘நான் குடிக்காமல் ஒழுங்காக ஒன்று சேர்ந்து வாழ்கிறேன்’ என கூறியுள்ளார். இதை நம்பிய சந்தானலட்சுமி, அவருடன் மீண்டும் வசிக்க தொடங்கினார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சதீஷ்குமார் சித்தூரை சேர்ந்த ஒரு பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டதும், அவர்களுக்கு 3 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த சந்தானலட்சுமி, ராணிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ராணிப்பேட்டையில் 2வது திருமணம் செய்த பெயிண்டர் கைது appeared first on Dinakaran.

Tags : Ranipet ,Satish Kumar ,Kelleys Road, Ranipet ,Santanalakshmi ,
× RELATED நெல்லை அருகே சாலை விபத்தில் 2 இளைஞர்கள் பலி