×

மீனவர்களுக்கான இடைக்கால நிவாரண தொகையை சிபிசிஎல் எண்ணெய் நிறுவனம் வழங்க வேண்டும்: பசுமை தீர்ப்பாயம் சாடல்

சென்னை: மீனவர்களுக்கான இடைக்கால நிவாரண தொகையை சிபிசிஎல் எண்ணெய் நிறுவனம் வழங்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. எண்ணூர் எண்ணெய் கலப்பு தொடர்பான விசாரணை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மீண்டும் தொடங்கியது. வெள்ள நீரில் எண்ணெய் கலந்தது மனிதரால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர், இது இயற்கையான பேரிடர் இல்லை என அரசு தரப்பு தெரிவித்தது. இது சாதாரண பிரச்சனை கிடையாது; மக்கள், மீனவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனை எனவும் தெரிவித்தது. பாதித்த மக்களுக்கு என்ன தீர்வு?; குருஷேத்ர போரைப்போல் பாதிப்பானது நீண்டு கொண்டே செல்கிறது என தீர்ப்பாயம் தெரிவித்தது. எண்ணெய் கசிவால் மீன்கள் இறந்தது பற்றி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதா? எனவும் வாரியத்திற்கு தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.

The post மீனவர்களுக்கான இடைக்கால நிவாரண தொகையை சிபிசிஎல் எண்ணெய் நிறுவனம் வழங்க வேண்டும்: பசுமை தீர்ப்பாயம் சாடல் appeared first on Dinakaran.

Tags : CBCL ,Green Tribunal ,Sadal ,CHENNAI ,Ennore… ,Green Tribunal Sadal ,Dinakaran ,
× RELATED நாகை அருகே பனங்குடியில் சிபிசிஎல்...