×

இளைஞர் கொலை வழக்கு சகோதரர்கள் 3 பேர் கைது

 

மணப்பாறை, டிச.12: மணப்பாறை அருகே சொத்து பிரச்சனையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சகோதரர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மணப்பாறை அருகேயுள்ள புத்தாநத்தம் கணவாய்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன்(37). இவரது குடும்பத்தினருக்கும், அவரது பெரியப்பா ராஜா குடும்பத்தினருடன் சொத்து பிரச்சனை இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் பெரியப்பா மகன்களால் முருகேசன் வெட்டிக் கொல்லப்பட்டார். இதில் முருகேசன் சகோதரர் கருப்பையா(38), மாமனார் பிச்சை(50) ஆகியோரும் காயமடைந்தனர்.

இது குறித்து புத்தாநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜா சேர்வை மகன்கள் பாலையா(37), செல்லதுரை(33) மற்றும் பொன்னுசாமி(எ)குஞ்சான்(32) ஆகியோரை புத்தாநத்தம் போலீஸார் கைது செய்தனர். இதில் பாலையா மற்றும் பொன்னுசாமி(எ)குஞ்சான் காயமடைந்திருந்ததையடுத்து இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

The post இளைஞர் கொலை வழக்கு சகோதரர்கள் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Manaparai ,Dinakaran ,
× RELATED மணப்பாறையில் சிப்காட் பணியாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி