×

வலங்கைமான் ஒன்றியத்திற்குட்பட்ட 3 ஊராட்சிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவு, மனைகளை வரன் முறைப்படுத்திட கால நீட்டிப்பு

 

திருவாரூர்,டிச.12: திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்குட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.02.2024 வரை விண்ணப்பிக்க வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மூலம் கால நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். இதனால் எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் இந்த இறுதி வாய்ப்பை தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post வலங்கைமான் ஒன்றியத்திற்குட்பட்ட 3 ஊராட்சிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவு, மனைகளை வரன் முறைப்படுத்திட கால நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Valangaiman Union ,Tiruvarur ,Thiruvarur ,District ,Collector ,Saru ,
× RELATED வலங்கைமான் ஒன்றியத்தில் 50 கிராம...