×

கலெக்டரிடம் பொதுமக்கள் மனு மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 367 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

 

அரியலூர்,டிச.12: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவி தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 367 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் மூலம் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) இளங்கோவன், மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post கலெக்டரிடம் பொதுமக்கள் மனு மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 367 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Ariyalur District Collector's Office Partnership ,People's Day Meeting ,Ani Mary ,Dinakaran ,People's Decrease Meeting ,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...