×

கேரளாவில் பணத்தகராறில் காதலனை வெட்டி கொன்று பெண் தற்கொலை போலீஸ் விசாரணை

திருவனந்தபுரம், டிச.12: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி அருகே பழேரி பகுதியை சேர்ந்தவர் குட்டப்பன். அவரது மனைவி சந்திரமதி (54). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணமாகி தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு குட்டப்பன் சந்திரமதியை பிரிந்து சென்று விட்டார். இதனால் சந்திரமதி தன்னுடைய தாய் தேவகியுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் அவருக்கும், அருகில் உள்ள தொடுவெட்டி பகுதியை சேர்ந்த முகம்மது பீரான் (58) என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. அதன்படி சந்திரமதியின் வீட்டுக்கு முகம்மது பீரான் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். 2 பேரும் சேர்ந்து பல்வேறு தொழில்களையும் செய்து வந்தனர்.

சமீபத்தில் 2 பேரும் சேர்ந்து ஒரு சரக்கு ஆட்டோவை வாங்கி இருந்தனர். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே பணத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை முகம்மது பீரான் வழக்கம் போல சந்திரமதியின் வீட்டுக்கு வந்தார். அப்போது தன்னுடைய தாயை சந்திரமதி அருகில் உள்ள மாமாவீட்டுக்கு அனுப்பி வைத்தார். இரவில் தேவகி வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பின்புறம் சந்திரமதி தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக தன்னுடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்த போது படுக்கையறையில் முகம்மது பீரான் கழுத்தில் வெட்டுப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

The post கேரளாவில் பணத்தகராறில் காதலனை வெட்டி கொன்று பெண் தற்கொலை போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Kuttappan ,Paheri ,Sultan Patheri ,Wayanad district ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...