×

142வது பிறந்த நாள் விழா எட்டயபுரத்தில் பாரதியாருக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை

எட்டயபுரம்: மகாகவி பாரதியாரின் 142வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள ‌மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் மற்றும் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், தமிழ் அறிஞர்கள், அரசு அதிகாரிகள் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி, விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆகியோர் மகாகவி பாரதியார் இல்லம் மற்றும் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல், பாரதியார் படித்த நெல்லை மதிதா இந்து மேல்நிலைப்பள்ளியில் உள்ள வகுப்பறையில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தபட்டு மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

The post 142வது பிறந்த நாள் விழா எட்டயபுரத்தில் பாரதியாருக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Ettayapuram ,Bharatiyar ,Tamil Nadu government ,Mahakavi ,Mahakavi Bharatiyar ,Ettayapuram, Thoothukudi district ,Dinakaran ,
× RELATED எட்டயபுரம் அருகே நீர்வரத்து ஓடை,...