×

பள்ளி பேருந்தில் ஆசிட் வெடித்து 23 மாணவர்களுக்கு மூச்சுத்திணறல்

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் நேற்று காலை 40 மாணவர்கள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். பேருந்தின் பின்புறத்தில் கழிப்பிடத்தை சுத்தம் செய்யும் பினாயில் மற்றும் ஆசிட் 2 கேன்களில் இருந்துள்ளது. பள்ளி பேருந்து அம்சாகுளம் என்ற இடத்தில் சென்றபோது வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது ஆசிட் கேன் வெடித்து சிதறி உள்ளது. இதில் ஆசிட் பேருந்தில் ஊற்றியதால் மாணவர்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பேருந்தும் பள்ளி வளாகத்துக்குள் சென்று விட்டது. இதையடுத்து மூச்சுத்திணறல் பாதிக்கப்பட்ட 23 மாணவர்கள் மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்த வந்த எம்எல்ஏ உதயசூரியன் மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

The post பள்ளி பேருந்தில் ஆசிட் வெடித்து 23 மாணவர்களுக்கு மூச்சுத்திணறல் appeared first on Dinakaran.

Tags : Chinnasalem ,Kallakurichi district ,
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...