×

மகனை குளத்தில் தள்ளி கொன்று தாய் தற்கொலை

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே முத்துப்பேட்டை, இந்திரா நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வனிதா (35). 6ம் வகுப்பு படிக்கும் 11 வயது மகன், 2ம் வகுப்பு படிக்கும் 7 வயது மகன் என இரு குழந்தைகள் உள்ளனர். செல்வராஜ்க்கு ஊரில் சொத்து பிரச்னை, கடன் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. கணவர் வெளிநாட்டில் இருந்த நிலையில், இப்பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் வனிதா மனமுடைந்துள்ளார். இதனால், விரக்தியடைந்த அவர், நேற்று அதிகாலை கடிதம் எழுதி வைத்துவிட்டு, தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு தற்கொலை எண்ணத்துடன் அப்பகுதியில் உள்ள குளத்திற்கு சென்றார். இதை உணர்ந்த மூத்த மகன் தாயுடன் போராடி, அவரது பிடியில் இருந்து தப்பித்து தனது தாத்தா வீட்டிற்கு சென்று நடந்தவற்றை தெரிவித்துள்ளான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாத்தா, உறவினர்கள், குளத்துக்கு சென்று பார்த்தபோது வனிதாவும், இளைய மகன் லிகாஷூம் (7) குளத்தில் இறந்து கிடந்தனர்.

The post மகனை குளத்தில் தள்ளி கொன்று தாய் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Selvaraj ,Muthuppetta, Indra, Ramanathapuram District, Tirupallani ,
× RELATED புதுச்சேரி அடுத்த சேதராபட்டு...