×

அங்கன்வாடி மையம் கட்ட ஆதரவு- எதிர்ப்பு

 

தர்மபுரி, டிச.11: நல்லம்பள்ளி அடுத்த பூதனஅள்ளி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள், நேற்று கலெக்டர் சாந்தியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பூதனஅள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் ஊர் பொதுக்கிணறு ஆகியவற்றிற்கு இடையே, மேற்கு பக்கத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட அதிகாரிகள் கடந்த மாதம் 20ம் தேதி அளவீடு செய்துள்ளனர். இந்த இடத்தில் அங்கன்வாடி மையம் அமைத்தால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது. மேலும் ஊர் திருவிழாவின் போது தேர் செல்வதில் சிரமம் ஏற்படும். பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் சிரமம் ஏற்படும். அங்கன்வாடி கட்டிடம் அமைய உள்ள இடத்தில் தான் பள்ளி ஆண்டுவிழா, கோயில் விழா உள்ளிட்ட அனைத்து பொது நிகழ்ச்சிகளும் நடக்கும்.

எனவே, அங்கன்வாடி மையம் கட்ட வேறு இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதேபோல், மற்றொரு தரப்பினர் கலெக்டர் சாந்தியிடம் கொடுத்த மனுவில், பூதனஅள்ளியில் அரசு புறம்போக்கு நிலத்தில், புதிய அங்கன்வாடி மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அந்த நிலத்தில் அங்கன்வாடி மையம் அமைக்க, ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து தடுக்கின்றனர். எனவே, குறிப்பிட்ட இடத்தில் அங்கன்வாடி மையம் கட்ட தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

 

The post அங்கன்வாடி மையம் கட்ட ஆதரவு- எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Anganwadi Centre ,Dharmapuri ,Nallampally ,Boothanaalli ,Collector ,Shanthi ,Anganwadi center ,Dinakaran ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...