×

குமரியில் ஏற்பட்ட மண் சரிவு; 4 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதை சீரமைக்கும் பணி நடந்து வருவதால் 4 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கொல்லம்-திருவனந்தபுரம் தினசரி விரைவுரயில் (06425) சேவை இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில் -திருவனந்தபுரம் விரைவுரயில்(06426) சேவை இன்று முழுமையாக ரத்து செய்கிறது. அதே போல திருவனந்தபுரம் – நாகர்கோவில் விரைவு ரயில் இன்று (06427) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரம் -நாகர்கோவில் விரைவு இரயில் (06435) சேவையின் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது….

The post குமரியில் ஏற்பட்ட மண் சரிவு; 4 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Landslide ,Kumari ,Southern Railway ,CHENNAI ,Nagercoil ,Thiruvananthapuram ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...