- ஜோஸ்
- அலுகாஸ் ஜ்வெலரி
- கோவா காந்திபுரா
- கோவா
- விஜய்
- ஜோஸ் அலுகாஸ் ஆபரணம்
- கோவா 100
- காந்திபுரா, கோவா
- தின மலர்
கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த விஜயை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கோவை 100 அடி ரோடு பகுதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் பக்கவாட்டு சுவரில் இருந்த ஓட்டை வழியாக கடந்த 27ம் தேதி நள்ளிரவு புகுந்த வாலிபர் ஒருவர், முதல் மற்றும் 2ம் தளத்தில் இருந்த 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றார். கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்டது தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள தேவரெட்டியூர் பகுதியை சேர்ந்த விஜய் என்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பொள்ளாச்சி, கேரளா, சேலம், பெங்களூர் உள்ளிட்ட பகுதியில் தீவிரமாக போலீசார் தேடி வந்தனர். கடந்த 10 நாட்களுக்கு விஜய் பொள்ளாச்சி வழியாக ஆனைமலை சென்றிருப்பதும், அங்கு அவர் வசித்த வீட்டில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. உடனடியாக அங்கு கோவை காந்திபுரம் போலீசார் விரைந்தனர். போலீசார் வந்ததை அறிந்த விஜய், வீட்டின் மேற்கூரை வழியாக தப்பி சென்றார்.
விஜயை தப்பிக்க வைத்த அவரது மனைவிவை போலீசார் கைது செய்தனர், பின்னர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது 3.2 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் மற்றும் 4 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், கோவை காந்திபுரத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த விஜயை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜயை தனிப்படை போலீசார் கோவைக்கு அழைத்து வருகின்றனர். ஐயப்ப பக்தர் போல மாலை அணிந்து வலம் வந்த விஜயை தனிப்படை போலீஸ் கைது செய்தது.
The post கோவை காந்திபுரத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்தவர் கைது; போலீசார் நடவடிக்கை..!! appeared first on Dinakaran.