×

ஈரானில் எரிபொருள் சேமித்து வைத்திருந்த 18 கலன்களில் தீப்பற்றியது: விபத்துக்கான கரணம் குறித்து போலீஸ் விசாரணை

தெஹ்ரான்: ஈரானில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் கடுமையான தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பிர்ஜந்த் என்ற இடத்தில் சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றியது.

எரிபொருள் சேமித்து வைத்திருந்த 18 கலன்களில் தீப்பற்றியதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தீப்பற்றியதை அடுத்து சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த கலன்கள் வெடித்து சிதறின. இந்த தீவிபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று கூறியுள்ள நிறுவனம் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

 

The post ஈரானில் எரிபொருள் சேமித்து வைத்திருந்த 18 கலன்களில் தீப்பற்றியது: விபத்துக்கான கரணம் குறித்து போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Iran ,Tehran ,Birjand ,Special Economic Zone ,Dinakaran ,
× RELATED ஈரானில் போர் பதற்றம் நிலவும் நிலையில்,...