×

மின்சாரம் தாக்கி பெண் பலி

 

பெரியகுளம், டிச. 11: பெரியகுளம் அருகே வடுகபட்டி வேளாளர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (57). இவர் மகள் புவனேஸ்வரி மற்றும் மருமகன் ரமேஷ்கண்ணன். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் ரமேஷ் கண்ணன், வாட்டர் ஹீட்டர் மூலம் வாளியில் சுடு தண்ணீர் காய வைத்துவிட்டு, முடி வெட்டுவதற்காக வெளியே சென்றுள்ளார்.

இந்நிலையில், வாளியில் புவனேஸ்வரி கை வைக்க மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரில் பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post மின்சாரம் தாக்கி பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Murugesan ,Vadugapatti Velalar Street ,Bhuvaneshwari ,
× RELATED பெரியகுளத்தில் சவ ஊர்வலத்தில் வெடி...