×

வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த டூவீலர் திருட்டு

 

காரிமங்கலம், டிச.11: காரிமங்கலம் அருகே புலிக்கல் பஞ்சாயத்து சொண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவர் நேற்று முன்தினம் இரவு, தனது டூவீலரை வீட்டின் முன் நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார். நேற்று காலை எழுந்து பார்த்த போது, டூவீலர் மாயமாகியிருப்பது தெரிய வந்தது. நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள், டூவீலரை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த டூவீலர் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Pachaiyappan ,Sondaalli ,Pulikkal panchayat ,
× RELATED திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்