×

சென்டர் மீடியனில் பைக் மோதி விபத்து கல்லூரி மாணவர் பரிதாப பலி

 

திருத்தணி, டிச. 11: திருத்தணி, எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் லோகநாதன். இவருடைய மகன் கமலேஷ்(19). இவர் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் யூசுப் அலி(20) என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கனகம்மாசத்திரம் சென்று விட்டு மீண்டும் திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்களுடைய மோட்டார் சைக்கிள் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஓட்டல் எதிரே உள்ள சென்டர் மீடியனில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கமலேஷ் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து போனார்.

காயமடைந்த யூசுப் அலியை திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கு குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன கமலேசின் பிணத்தை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்டர் மீடியனில் பைக் மோதி விபத்து கல்லூரி மாணவர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Thiruthani, Loganathan ,MGR Nagar ,Kamlesh ,
× RELATED மனித முகம் போன்ற அரிய வகை ஆந்தை பிடிபட்டது