×

4 தலைமுறை வாரிசுகளுடன் 100வது பிறந்தநாளை கொண்டாடிய முதியவர்

ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி, மோகன்குமாரமங்கலம் வீதியைச் சேர்ந்தவர் டி.குமரகுரு (100). இவரது மனைவி லட்சுமியம்மாள் (96). குமரகுரு தனது ஆரம்ப காலங்களில் ஈரோடு, கனி மார்க்கெட்டில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். குமரகுரு-லட்சுமியம்மாள் தம்பதிக்கு 3 மகன்கள், 3 மகள்கள். தற்போது அவர்களது வாரிசுகளுக்குத் திருமணமாகி பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன் என 4வது தலைமுறை வந்துவிட்டது. 1924ல் பிறந்த குமரகுரு 100 வயதை எட்டியதையடுத்து, அவரது குடும்பத்தினர் நேற்று அவருக்கு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர்.

அப்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து, பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாடி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். விழாவில் குமரகுரு-லட்சுமியம்மாள் தம்பதியின் மகன்கள், மகள்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் வழியிலான பேரன்கள், கொள்ளுப் பேரன்கள், எள்ளுப் பேரன்கள் என மகன்கள் வழியில் 45 பேரும், மகள்கள் வழியில் 45 பேரும் என மொத்தம் 90 பேர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து இந்த பிறந்த நாள் விழாவை நடத்தினர்.

 

The post 4 தலைமுறை வாரிசுகளுடன் 100வது பிறந்தநாளை கொண்டாடிய முதியவர் appeared first on Dinakaran.

Tags : Erode ,T. Kumaraguru ,Mohankumaramangalam Road, Surambatti, Erode ,Lakshmiyammal ,Kumaraguru ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...