×

கொலை மிரட்டல் அதிமுக ஒன்றிய செயலாளர் மீது கலெக்டரிடம் பெண் புகார்

 

சிவகங்கை, டிச.10: திருப்புவனம் அருகே பிரமனூரை சேர்ந்த ஆனந்தவள்ளி(43) மற்றும் குடும்பத்தினர் கலெக்டர் ஆஷாஅஜித்திடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: திருப்புவனம் தாலுகா பழையனூர் சமுதாயக் கூடத்தில் கடந்த 7ம் தேதி அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் கூட்டம் சிவகங்கை மாவட்ட செயலாளர் தலைமையில் நடந்தது. இதில் பிரமனூரில் இருந்து நான் மற்றும் 20பெண்கள் கலந்து கொண்டோம். இதில் எங்கள் ஊரை சேர்ந்தவர்களுக்கும் அதிமுக ஒன்றிய செயலாளருக்கும் பூத் கமிட்டி அமைப்பதில் வாக்கு வாதம் ஏற்பட்டது.

மாவட்ட செயலாளர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினார். இந்நிலையில் ஒன்றிய செயலாளர் தரப்பினர் நிகழ்ச்சி முடிந்து வரும் போது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து பழையனூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post கொலை மிரட்டல் அதிமுக ஒன்றிய செயலாளர் மீது கலெக்டரிடம் பெண் புகார் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Sivagangai ,Anandavalli ,Bramanur ,Tiruppuvanam ,Asha Ajith ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்