×

அதியமான்கோட்டையில் திருநங்கை தற்கொலை

தர்மபுரி: அதியமான்கோட்டை முண்டாசு குறவடை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார்(எ) சிம்ரீனா(22). திருநங்கையான இவர், குடும்பத்தை விட்டு பிரிந்தார். இதையடுத்து, அவரது பெற்றோர் தங்களுடன் வந்து வசிக்குமாறு அழைத்து வந்துள்ளனர். இதனால், மனவேதனையில் இருந்த சிம்ரீனா, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு சிம்ரீனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post அதியமான்கோட்டையில் திருநங்கை தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Athiyamankottai ,Dharmapuri ,Praveen Kumar (A) Simreena ,Athiyamankottai Mundasu Kuravadai ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு