கோவை: கோவையில் இருந்து சுமார் ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை 22 லாரிகள் மூலம் ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 5 விமானங்கள் மூலம் சுமார் 8 டன் பால் பவுடர், மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
The post மிக்ஜாம் புயல் பாதிப்பு: கோவையில் இருந்து சுமார் ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் சென்னைக்கு அனுப்பிவைப்பு..!! appeared first on Dinakaran.