×

கடந்த காலங்களைவிட இந்த முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது: திருமாவளவன் பேட்டி

சென்னை: கடந்த காலங்களைவிட இந்த முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புயல் பாதித்த பிறகு முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் உடனே களத்தில் இறங்கி மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு தன் சக்திக்கு ஏற்ப மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது; அதை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் களத்துக்கு சென்று மக்களுக்கு உதவ வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தி உள்ளார் என்று தெரிவித்தார்.

The post கடந்த காலங்களைவிட இந்த முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Thirumaalavan ,Chennai ,Thirumavalavan ,
× RELATED சென்னையில் ம.நீ.ம. கட்சித் தலைவர்...