ஒகேனக்கல்: ஒகேனக்கல் மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.விழுப்புரம் மாவட்டம் கெண்டனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும் மருத்துவ மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ ஊழியர்கள் குடும்பத்துடன் இன்று அதிகாலை ஒகேனக்கல் சுற்றி பார்க்க வந்தனர்.
ஒகேனக்கல் மலைப்பகுதி ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றும் கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி மலைப்பகுதியில் கவிழ்ந்தது. விபத்தில் சிக்கியவர்களை ஒகேனக்கல் போலீசார் மீட்டு தனியார், அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்ற தனியார் பேருந்து விபத்து: குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.