×

மஞ்சளார் அணையில் நீர்த்திறப்பு அதிகரிப்பு; ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

தேனி: தேனி பெரியகுளம் அருகே மஞ்சளார் அணையில் நீர்த்திறப்பு அதிகரிக்கப்பட்டதால் ஆற்றங்கரையோர பகுதி மக்கள் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஞ்சளார் அணையில் இருந்து 552 கனஅடி நீர்த்திறப்பால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மஞ்சளார் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 57அடியில் 55 அடியை எட்டியதால் நீர்த்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

The post மஞ்சளார் அணையில் நீர்த்திறப்பு அதிகரிப்பு; ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Manjalar Dam ,Theni ,Periyakulam, Theni ,Manjalar… ,Dinakaran ,
× RELATED முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி...