×

சேரன்மகாதேவியில் தனியார் பள்ளி பேருந்து தீப்பிடித்து நாசம்

வீரவநல்லூர், டிச.9: சேரன்மகாதேவியில் தனியார் பள்ளி பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசமானது. அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியின் பேருந்தில் நேற்று மாலை சேரன்மகாதேவி மற்றும் பத்தமடை பகுதிகளில் உள்ள மாணவர்கள் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்தனர். பின்னர் பேருந்தானது அம்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தினை விகேபுரம் கட்டப்புளித்தெருவை சேர்ந்த சுந்தரம் மகன் கணேசன்(59) என்பவர் ஓட்டிச்சென்றார். பேருந்தானது சேரன்மகாதேவியில் சென்ற போது பீயுஸ் கேரியரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு பேருந்து தீப்பற்றியுள்ளது. இதனால் பேருந்தை நிறுத்திய டிரைவர் கணேசன் தீயை அணைக்க முயன்ற போதும் தீ மளமளவென வேகமாக பரவியது. தகவலறிந்த சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post சேரன்மகாதேவியில் தனியார் பள்ளி பேருந்து தீப்பிடித்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Cheranmahadevi ,Veeravanallur ,Ambasamudram… ,Dinakaran ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு