×

புது மாப்பிள்ளை விஷம் குடித்து சாவு

இடைப்பாடி, டிச.9: இடைப்பாடி அருகே நல்லங்கியூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்-இந்திராணி தம்பதியின் 3வது மகன் இளவரசன் என்கிற கீர்த்தி(21). கொட்டாயூர் பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார். இவர், கடந்த 15 நாட்களுக்கு முன், சேலத்தைச் சேர்ந்த உறவினர் ரத்தினம் மகள் திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு ரத்தினம் எதிர்ப்பு தெரிவித்து, கருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இதையடுத்து, இளவரசனும், திவ்யாவும் கருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகினர். அங்கு திவ்யாவின் பெற்றோர், இருவரின் திருமணத்தை முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டு சான்றிதழ்களை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். இதையடுத்து இளவரசனும், திவ்யாவும் நல்லங்கியூர் பகுதியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், இளவரசனுக்கு திவ்யாவின் பெற்றோர் போன் செய்து, பதிவு திருமணம் செய்து சான்றிதழ்களை கொடுக்குமாறு கட்டாயப்படுத்தினர். இதனால் மனவேதனை அடைந்த இளவரசன், கடந்த 7ம் தேதி களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கினார். அவரை சகோதரர்கள் மீட்டு, இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் ேசர்க்கப்பட்ட இளவரசன், நேற்று மதியம் உயிரிழந்தார். இதுகுறித்து குப்புசாமி அளித்த புகாரின் பேரில், தேவூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புது மாப்பிள்ளை விஷம் குடித்து சாவு appeared first on Dinakaran.

Tags : Eadhapadi ,Keerthy ,Ganesan ,Nallangyur ,Kottayur ,
× RELATED கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா