×

சென்னைக்கு கணவரை பார்க்க சென்ற மலேசிய இளம்பெண் 2 குழந்தையுடன் மாயம் போலீசில் கணவர் புகார்

புதுச்சேரி, டிச. 9: சென்னையில் கணவரை பார்க்க சென்ற மலேசிய இளம்பெண் 2 குழந்தைகளுடன் மாயமானார். புதுச்சேரி, அரும்பார்த்தபுரம், கணபதி நகரில் வசிப்பவர் வினோத்குமார் (38). இவர் கடந்த 2018ல் மலேசியாவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் சரளாவை (35) திருமணம் செய்தார். இவர்களுக்கு தற்போது யாதவ் (4), யாஷ்வின் (2) என்ற இரு மகன்கள் உள்ளனர். வினோத்குமார் சொந்தமாக கன்ஸ்ட்ரக்‌ஷன் நடத்தி வருகிறார். இதன் கிளைகள் சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ளது. வினோத்குமார் சென்னையில் உள்ள கம்பெனியை அங்கு தங்கி பார்த்துவிட்டு மீண்டும் புதுச்சேரி வீட்டில் தங்கி ரெட்டியார்பாளையத்தில் உள்ள கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனியை நடத்தி வருகிறார். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கன்ஸ்ட்ரக்‌ஷன் தொழில் சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை வருமாம்.
இதனிடையே மிக்ஜாம் புயலுக்கு முன்பு புதுச்சேரி வந்த வினோத்குமார் 3ம்தேதி சென்னை சென்றுள்ளார்.

பின்னர் அங்கு பலத்த மழை பெய்யவே அங்கேயே தங்கியுள்ளார். இதனிடையே கடந்த 6ம்தேதி தனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்ட சரளா, குழந்தைகளுடன் சென்னைக்கு வருவதாக கூறினாராம். ஆனால் மனைவியும், குழந்தைகளும் அங்கு வரவில்லை. பின்னர் அவர் புதுச்சேரி வந்து பார்த்தபோது அங்கும் அவர்கள் இல்லை. இதையடுத்து அதிர்ச்சியடைந்த வினோத்குமார், தனது மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து அக்கம்பக்கத்தில், உறவினர்களிடம் விசாரித்த நிலையில் எந்த துப்பும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த அவர், உடனே ரெட்டியார்பாளையம் போலீசில் முறையிட்டார். அதன்பேரில் எஸ்ஐ முருகன் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து 2 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

The post சென்னைக்கு கணவரை பார்க்க சென்ற மலேசிய இளம்பெண் 2 குழந்தையுடன் மாயம் போலீசில் கணவர் புகார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mayam police ,Puducherry ,Arumbarthapuram ,Ganapathi ,
× RELATED எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர்...